குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் கதண்டு கடித்து 4 பேர் படுகாயம்

திருக்காட்டுப்பள்ளி, அக். 15: திருக்காட்டுப்பள்ளி அருகே கதண்டு கடித்து 4 பேர் படுகாயமடைந்தனர். திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் மந்தை தெரு ஆனந்தன் (55), செய்யாமங்கலம் காளியம்மன் கோவில் தெரு கர்ணன் மகள் கமலி(19), கண்டமங்கலம் மேலத்தெரு ஏகாம்பரம் மனைவி பவுனம்மா (28), மந்தைதெரு ஜெய்சங்கர் மனைவி ஆகியோர் வயலில் வேலை செய்தனர். பின்னர் வேலை முடிந்து அக்ரஹாரம் மெயின் ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது கதண்டுகள் கடித்து 4 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Related Stories: