×

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

பெரம்பலூர், அக். 15: பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (22). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கோபிநாத் விசாரணை நடத்தினார். அதில் திருமணம் நடந்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து கோபிநாத் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மீட்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...