×

சம்மந்தபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டும்

விருதுநகர், அக்.15: சம்மந்தபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜபாளையம் சம்மந்தபுரம் கிராம மக்கள் அளித்த மனுவில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மற்று வாரியத்தின் திருநெல்வேலி கோட்டம் மூலம் ராஜபாளையம் சம்மந்தபுரம் கிராமத்தில் 800 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட இருப்பதாக அறிகிறோம். சம்பந்தபுரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில் வீடு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags : Apartment ,Samantapuram ,
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...