×

வீடு புகுந்து திருடிய 3 பெண்கள் கைது

தேவகோட்டை. அக்.15:  தேவகோட்டை அருகே சடையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர் மனைவி ஆரோக்கிய செல்வி(45). இவரது வீட்டிற்கு கொசு மருந்து அடிப்பதாக நேற்று 3 பெண்கள் வந்தனர். வீட்டில் இருந்த பர்சை எடுத்துக்கொண்டு தலைமறைவாயினர். வீட்டிற்கு கொசுமருந்து அடிப்பதாக வந்த பெண்கள் திருடியது தெரியவந்தது. அவர்களை கானத்தான்காடு கிராமத்தில் இருந்து  சடையன்காட்டிற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இவர்கள் காந்தி ஜெயந்தியன்று பருத்திக்குடி கிராமத்தில் மயக்கப்பொடி தூவி மூதாட்டி ஒருவரிடம் 5 பவுன் திருடியதும் மாற்றுத்திறனாளியிடம் ஒன்றரை பவுன் திருடியதும் தெரியவந்தது. தர்ம அடி கொடுத்து மூன்று பேரையும் ஆறாவயல் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிவகங்கையைச் சேர்ந்த பூமயில், ராணி, பரமேஸ்வரி ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் சடையன்காடு பகுதியில் தனியார் தோட்டத்தில் சொகுசு வீட்டில் கும்பலாக தங்கி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தேவகோட்டை தாலுகா போலீசார் அங்கு திருட்டுக்கும்பலை பிடிக்கச் சென்றனர்.   

Tags : women ,house ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது