×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மக்களை மிரட்டும் நோய் பாதிப்பு நாய்கள்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.15: ஆனந்தூரில் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. இதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஆனந்தூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் சுற்றி திரிவதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களின் புத்தக பைகளை இழுத்தும், சீருடைகளை கடித்தும் விடுகின்றது. இதனால் மாணவர்கள் நாய்களிடமிருந்து தம்பித்தால் போதும் என ஓடும் நிலை உள்ளது.இதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் தனது பிள்ளை எங்கு நாங்களிடம் மாட்டிக் கொண்டு கடிவாங்கி வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். சில பெற்றோர்கள் மற்ற வேலையை விட்டு விட்டு தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு போய் விடுவதும், கூட்டி வருவதுமாக உள்ள நிலை உள்ளது. இது சம்மந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இரவு, பகலாக எங்கள் ஊரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய்களக்கு பயந்து அச்சத்துடன் நடமாடும் நிலைதான் இருக்கிறது. நோய் பாதித்த நாய்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை விட்டி கடிக்கிறது. ஆகையினால் உயிர் சேதம், ஏதும் நடைபெறும் முன்னர் நாய்களை பிடித்து அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

Tags : Disease Dogs ,Mangalam ,
× RELATED மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்