×

நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதி தண்ணீருக்கே செலவாகிறது

சாயல்குடி, அக்.15: குடிநீர் தடையின்றி வழங்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.திருவாடானை மணக்குடி பஞ்சாயத்து புதுக்காடு பகுதி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் அளித்த மனுவில்,‘‘எங்கள் பகுதியில் காவிரி குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பல மாதங்களாக திண்டாடி வருகின்றோம். திருவாடானை மணக்குடி பஞ்சாயத்து புதுக்காடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. 12 வருடங்களாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம்.நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதி பணம் தண்ணீருக்கே செலவாகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தண்ணீருக்காக கஷ்டப்படுகின்றனர். கால்நடைகள் தண்ணீர் இல்லாமல் இறந்து வரும் நிலை உள்ளது. தனியார் லாரியில் இருந்து கொண்டு வரும் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகிறது. அந்த தண்ணீரும் நிரந்தரமாக கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளோம். எங்களுக்கு நிரந்தரமாக தங்கு தடையின்றி குடிநீர் கிடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை