×

திமுக எம்பி மீதான அவதூறு வழக்கு நவ.19க்கு தள்ளிவைப்பு

சேலம், அக்.15: சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சேலம் நீதிமன்றம் நவ.19ம் தேதிக்கு தள்ளிவைத்தது. சேலத்தில் சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம் திறப்பு விழா கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், 8 வழிச்சாலையால் முதல்வர் குடும்பம் தான் பயன்பெறுகிறது என்று பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு வழக்கறிஞர் தனசேகரன், எம்.பி., பார்த்திபன் மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீது விசாரணை நேற்று சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி