×

ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீரை ஏரிகளில் நிரப்பக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

தம்தர்மபுரி, அக்.15: நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில், ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.  தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் மொரப்பூர் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்திற்கு தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். உண்ணாவிரத்தில், தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவிற்குட்பட்ட கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து மின்மோட்டார்கள் மூலம், உபரிநீரை நீரேற்றம் செய்து மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர் பகுதிகளில் உள்ள 44 ஏரிகளில் நிரப்ப வேண்டும். இதன் மூலம் இந்த பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  இதில், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சுரேஷ் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : lakes ,Ichampadi Dam ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!