×

டெங்கு கொசு ஒழிப்பு பணி

அரூர், அக்.15: கம்பைநல்லூர் பேரூராட்சியில், டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடந்தது. கம்பைநல்லூர் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடந்தது. இப்பணிகளை பேரூராட்சி உதவி இயக்குனர் ஜீஜாபாய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள், டெங்கு கொசுக்களை கண்டறிந்து ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொது இடங்களில் மழைநீர் தேங்குவதையும், வீடுகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்கள், பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆறுமுகம், அலுவலர்கள் ராஜ்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா