×

பெரியசாமிகொட்டாயில் பழுதான மின்மோட்டாரை சீரமைக்க வலியுறுத்தல்

பாப்பாரப்பட்டி, அக்.15: நல்லம்பள்ளி அருகே, ஆழ்துளை கிணற்றுக்கான பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி அருகே பெரியசாமிகொட்டாயில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2013ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் அருகில் சின்டெக்ஸ் தொட்டியும் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2ஆண்டுகளாக மின் மோட்டார் பழுதடைந்து உள்ளதால், குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சின்டெக்ஸ் ேடங்கிற்கான மின் மோட்டாரை சீரமைத்து, மீண்டும் தண்ணீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா