×

நிலமற்ற விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க ₹50ஆயிரம் வழங்க வேண்டும்

தர்மபுரி, அக்.15: நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, கறவை மாடுக்கடன் வாங்க, ₹50 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பாலக்கோடில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன் வேலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மாவட்டத்தில் வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்படும், வேலைகளை பயனாளிகளுக்கு வழங்காமல் ஒப்பந்ததாரர்களை வைத்து பணி செய்யபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் வாழும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு கறவை மாடுக் கடன் வாங்க, ₹50 ஆயிரம் வழங்க வேண்டும். இதில் ₹25 ஆயிரம் மானியமாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். சமுதாய கூடங்கள், கழிப்பிடங்கள், மகளிர் சுகாதார வளாகங்கள் ஆகியவற்றை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், ராஜகோபால், முருகேசன், பச்சாகவுண்டர், மாதையன், சாக்கன், ராமசந்திரன், மல்லையன், சென்னி, சரவணன், சாரதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா