கோவை, அக்.15: தேசிய கருவுறுதல் விருது 2019 என்ற நிகழ்ச்சி சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பேறு அடைய சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். குழந்தை பேறு இல்லை என்ற நிலையை குறைப்பது தொடர்பாக இந்த நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மருத்துவமனையின் இயக்குநர் அரவிந்த சந்தருக்கு தென்னிந்திய அளவில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பேறு அடைய சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவர் என்ற விருது வழங்கப்பட்டது. இதேபோல் குழந்தைபேறு ஏற்படுத்த சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை என்ற விருதும் ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தல்லைவர் சுஷில் ஷா வழங்கினார்.