×

மரத்தில் வேன் மோதி பெண் பலி

ஈரோடு, அக். 15: ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் சேமூர் பகுதியில் தனியார் நார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வாரந்தோறும் எழுமாத்தூர் வார சந்தையில் காய்கறி வாங்க வேனில் அனுப்பி வைப்பது வழக்கம். வழக்கம்போல், நேற்று முன்தினம் தனியார் நிறுவன வேனில்  ஊழியர்கள் செல்வி (55), கவுரி (26) ஹாஜி (40) மற்றும் ஹாஜியின் மகள் நஸ்மா (9) ஆகியோர் சந்தைக்கு சென்றனர். வேனை டிரைவர் செல்வராஜ் ஓட்டி சென்றார்.

எழுமாத்தூர்-பூந்துறை ரோட்டில் டிரைவர் வேனை வேகமாக ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வேனில் முன்புறம் அமர்ந்து இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவர் செல்வராஜ் தப்பி ஓடினார்.
காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், செல்வி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மற்ற 3 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி