மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

ஈரோடு, அக்.15: தாளவாடி நேதாஜி சர்க்கிள் பஸ் ஸ்டாப் அருகில் சிலர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக தாளவாடி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில். மது விற்பனையில் ஈடுபட்டிருந்த தாளவாடி சூசைபுரம், மேற்கு வீதியை சேர்ந்த பெலாரன்ஸ் மகன் பிரதீப்குமார் (23) என்பவரை போலீசார் கைது செய்ததோடு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல்,கோபி மொடச்சூர் சந்தை கடையில் விற்பனை செய்த கோபி மொடச்சூர் வடுகபாளையம் அண்ணமார்கோவில் வீதியை சேர்ந்த முருகன் மனைவி பழனியம்மாள் (40) உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: