×

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 பேர் கைது

திருப்பூர், அக். 15:  திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, திருப்பூர் வடக்கு போலீசார் அப்பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.அப்போது, புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பார்த்திபன் (23), அருண் (23) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சீட்டாட்டம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற திருமுருகன்பூண்டி போலீசார் பிரபு (28) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

 மத்திய போலீசார் நடத்திய சோதனையில், பாரதி நகர், பாளையக்காடு ஆகிய பகுதிகளில் வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த சரத்குமார் (21), கணேசன் (54) ஆகியோரை கைது செய்தனர். ராதா நகர், பி.என்.ரோடு, பாளையக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை செய்து, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அப்பாதுரை (22), நாகராஜன் (36), சதீஸ் (26), சிலம்பரசன் (30) ஆகியோரை கைது செய்தனர்.


Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை