சென்னை: சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (52). மளிகை வியாபாரி. இவர், நேற்று மதியம் தொழில் நிமித்தமாக தனது பைக்கில், வடபழனியில் இருந்து அசோக் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வடபழனி பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற மாநகர பேருந்தை (த.எ.570 ஜி) மகேந்திரன் முந்திச்செல்ல முயன்றார். ஆனால், அந்த சாலை குறுகிய நிலையில் இருந்ததால், அங்குள்ள கோயில் சுவர் மீது மோதாமல் இருக்க அவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.