தண்டையார்பேட்டை: சென்னை பூங்கா நகர், ராசப்ப செட்டி தெருவில், முத்துக்குமார சுவாமி கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் ராஜகோபுரம் கீழ்புறம், மேற்கு பகுதியில், கோகிலா என்பவர் வாடகைதாரராக இருந்தார். கோயில் பயன்பாட்டிற்கு அந்த இடம் தேவைப்பட்டதால், வாடகைத்தாரரை காலி செய்யுமாறு அறநிலையத்துறை அறிவுறுத்தியது. ஆனால், வாடகைதாரர் காலி செய்யவில்லை. இதுகுறித்து, கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.