பாவூர்சத்திரம், அக். 15: சீராக குடிநீர் வழங்கக்கோரி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எழில்நகர், பெரியார் நகர், சத்யா நகர், மகாத்மா காந்தி நகர், நேரு நகர் போன்ற பகுதிகள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு மேலப்பாவூர் குளங்களில் உள்ள கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.