×

சுரண்டை முருகப்பாஸ் ஜவுளி கடையில் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு

சுரண்டை, அக். 15:  சுரண்டை முருகப்பாஸ் ஜவுளி கடையில் தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. சுரண்டை முருகப்பாஸ் ஜவுளி கடையில் தீபாவளியை முன்னிட்டு புதிய ரக ஆடைகள், பல வண்ணங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன. முன்னணி பிராண்ட் ஆடைகள், பட்டு ரகங்களும் தள்ளுபடியில் கிடைக்கிறது. தீபாவளியை முன்னிட்டு ரூ.ஆயிரத்திற்கு மேல் ஆடை வாங்கும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் பரிசு திருவிழா திட்டத்தின்கீழ் நான்ஸ்டிக் தோசை தவா, பிரியாணி சட்டி, இட்லி குக்கர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், டேபிள் டாப் கிரைண்டர், 32 இஞ்ச் எல்இடி டிவி போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. முருகப்பாஸ் நிறுவனத்தாரின் தீபாவளி விற்பனையில் நிச்சய பரிசு திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக ஜவுளி வாங்கிய அரியப்பபுரத்தை சேர்ந்த எஸ்.ரமேஷ் - திலகவதி தம்பதிக்கு 32 இன்ச் எல்இடி டிவி பரிசாக வழங்கப்பட்டது. இதனை முருகப்பா நிறுவனத்தாரின் மேலாளர் எம்.சுரேஷ் வழங்கினார். இந்த பரிசு திட்டம் தீபாவளி வரை தொடரும் என்று அவர் கூறினார்.

Tags : customers ,
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...