×

காங். வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து செங்கோட்டை, சுரண்டை திமுகவினர் ஓட்டுசேகரிப்பு

செங்கோட்டை, அக். 15:  நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரணை ஆதரித்து செங்கோட்டை, சுரண்டை பகுதி திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரூபி மனோகரனை ஆதரித்து செங்கோட்டை ஒன்றிய திமுகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். களக்காடு பேரூராட்சி மேலபொத்தை பகுதியில் வீடு, வீடாக அவர்கள் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை வகித்தார். புதூர் பேரூர் செயலாளர் கோபால், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பரமசிவன், இளைஞரணி சுப்புராஜ்,  சந்தோஷ், கற்குடி சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு  இசக்கிதுரை, பொறுப்பாளர் ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டை நகர திமுகவினர் களக்காடு பேரூராட்சி சிதம்பரபுரம் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட தகவல் தொழிநுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுதன் ராஜா, நகர தகவல் தொழிநுட்ப அணி துணை அமைப்பாளர் கணேசன், சிதம்பரபுரம் முத்துசெல்வன், 8வது வார்டு அருணா, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துலதா மற்றும் திமுகவினர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

Tags : Ruby Manoharan ,Drivers ,Surandai DMK ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...