×

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் முதுகு தண்டுவடம் குறித்த கருத்தரங்கம்

காஞ்சிபுரம், அக். 15: இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில் முதுகுத்தண்டு வடம் குறித்த தொடர் மருத்துவக் கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ரவி வரவேற்றார். இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை முன்னாள் தலைவர்கள் விக்டோரியா, பி.டி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கருத்தரங்கில் சவீதா மருத்துவக் கல்லூரியில் முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணர்கள் வி.டி.டி.ராஜன், அரவிந்த் குமார், சதீஷ் ஆனந்த் ஆகியோர் முதுகுத் தண்டுவட பிரச்சினைகள், அதற்கான சிகிச்சை முறைகள், முன்னெச்சரிக்கைகள், முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் வராமல் தடுப்பது உள்ளிட்டவை குறித்து தொடர்  உரையாற்றினர். காஞ்சிபுரம் மருத்துவர்களான இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் பூபதி மற்றும் துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு, உயிர் மருத்துவ கழிவுகள் எப்படி கையாள்வது குறித்த ஒப்பந்தம் மற்றும் அங்கீகாரம் பெற பேருதவி சேவை புரிந்தமைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.
இறுதியில் காஞ்சிபுரம் கிளை  பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார்.

Tags : Indian Medical Association ,
× RELATED திருவாரூர் தற்போது வரை 60 சதவீதம்...