நாகை, அக்.15: அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு வரும் 23ம் தேதி வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு பயனாளிகள் தேர்வு செய்திட கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி இந்த மாதம் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்று பரிசீலனை செய்து பயனாளிகள் தேர்வு செய்ய வரும் 23ம் தேதி வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.