×

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி மனு

கடலூர், அக். 15: கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் தெருமுனை பிரசாரம் செய்து வருகிறோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Democrat ,
× RELATED டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை கண்டித்து...