ஆழ்வார்திருநகரியில் கண்பரிசோதனை முகாம்

வைகுண்டம், அக். 15: ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தூத்துக்குடி  மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கிராம உதயம் கிளை மேலாளர்  வேல்முருகன் தலைமை வகித்தார். தன்னார்வ தொண்டர் முத்துராஜ், இலவச  மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன்  முன்னிலை வகித்தனர். தனி  அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஓய்வுபெற்ற பிடிஓ ராஜப்பாவெங்கடாசாரி முகாமை துவக்கிவைத்தார்.

 முகாமில் பங்கேற்ற மக்களுக்கு, கண் மருத்துவர் கர்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தகுந்த ஆலோசனை வழங்கினர். இதில் ஆழ்வார்தோப்பு, நளராஜபுரம், நவலெட்சுமிபுரம், ஆழ்வார்திருநகரி,  மளவராயநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இவர்களில் 19பேர் இலவச  கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். முகாமில் பகுதி பொறுப்பாளர் பிரேமா, மையத்தலைவர்கள் உஷா,  ஆயிஷா, சித்திமா, தன்னார்வ தொண்டர் பாலவிநாயகம்   உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: