×

பூரண மதுவிலக்கு அமல்

தூத்துக்குடி, அக். 15: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என  மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை கலெக்டரிடம் மனு அளித்துள்ளது. இதுகுறித்து  மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன்  தலைமையில் துணைச் செயலாளர்கள் காதர்பாட்ஷா, ராசுகுட்டி, இளைஞர் அணி  மாவட்டச் செயலாளர் முகமது ரபீக், மாநகர செயலாளர் ஹச்சிமுகமது உள்ளிட்டோர்  கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு விவரம்:  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த  தொடர் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறோம். அதன் ஒரு  பகுதியாக இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளிக்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு