முத்துப்பேட்டை. அக்,15: இன்று உலக கை கழுவும் தினம் உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இதில் உலக சுகாதார நிறுவனம் நோய்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக 1965ம் ஆண்டு முதல் அக்டோபர் 15ம் தேதியை உலக கைகழுவும் தினமாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி உலக கை கழுவும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தனியார் பள்ளியில் உலக கை கழுவும் தினத்தை கொண்டாடப்பட்டது. மேலும் மாணவர்கள் ஒன்றாக நின்று கை கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.