×

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

வலங்கைமான்,அக்.15: வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன் பெறும் விதமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக இத்திட்டத்தில் வேதாரண்யம் பகுதிக்கு கும்பகோணம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பாபநாசம்-வலங்கைமான் மற்றும் வலங்கைமான் -மன்னார்குடி சாலைவழியாக சாலையின் மையப்பரப்பில் இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தி தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதும் அதை சரிசெய்வதும் தொடர் கதையாக உள்ளது.இந்நிலையில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் செம்மங்குடி பகுதியில் வேதாரண்யம் கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கால்வாய் போல் ஓடுகிறது. மேலும் சாலையும் பழுதாகியுள்ளதால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

வரும் 29ம் தேதி ஆலங்குடி குருக்கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளதால் குருபெயர்ச்சிக்கு முன்னதாகவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சரி செய்ய ெபாதுமக்கள் கோரிக்கைமேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகே மாதாக்கோயில் மற்றும்  குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள மக்கள் பழுதடைந்த நிலையில் உள்ள  மேல்நிலை நீர்தேக்க தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில்  உள்ளனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...