அண்ணாநகர்: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துரை (56). இவரது மகன் வடிவேல் (25). லாரி டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை செங்குன்றத்தில் இருந்து லாரியில் செங்கல் ஏற்றிக் கொண்டு மதுரவாயல் வழியாக சென்று கொண்டிருந்தனர். லாரி டிரைவர் துரை உட்பட 3 பேர் முன்பக்கம் அமர்ந்து சென்றனர். மேலும், செங்கல் மீது ஒருவர் அமர்ந்து சென்றார். திருமங்கலம் 100 அடி சாலை வழியாக சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால், சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்தது. இதனால், டிரைவர் உள்பட லாரியில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.