×

அடிதடி தகராறில் 4 பேர் கைது

வேப்பனஹள்ளி, அக்.10: வேப்பனஹள்ளி அருகே எட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயன் (47) கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது மாமனார் குல்லியப்பா (66), மைத்துனர் சந்தோஷ் (28) ஆகிய இருவரும் சேர்ந்து, திம்மராயனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், வேப்பனஹள்ளி போலீசார் குல்லியப்பன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அதே போல், வேப்பனஹள்ளி அருகே நாடுவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் ஜீவா(22). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த நாராயண நாயுடு மகன் பாஸ்கர் (23), சீனிவாசன் மகன் கணேஷ் (28) ஆகியோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், பாஸ்கர் மற்றும் கணேஷ் ஆகிய இருவரும், ஜீவாவை சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில்  வேப்பனஹள்ளி போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா