×

தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை

திருச்சி, அக். 10: திருச்சி உறையூர் காவேரி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜோதிலிங்கம்(37). சீலிங் கூலி தொழிலாளி. இதில் கடந்த 7ம் தேதி மகனுக்கு பிறந்தநாள், அதற்கு அடுத்த நாள் இவரின் அண்ணன் மகன் நினைவு நாள் என்பதால் சோகத்தில் இருந்த ஜோதிலிங்கம் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, மனைவியின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த உறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : worker suicide ,
× RELATED தொழிலாளி தற்கொலை