திருச்சி, அக்.10: திருச்சி மாவட்டத்தில் 11ம் தேதி (நாளை) வருவாய்த்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் வாரம்தோறும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கிராமம் தேர்வு செய்து அங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, நிலம் சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.