திருச்சியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, அக்.10: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (11ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ளலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: