கல்லாவில் ‘கை’ வைத்த வாலிபர் கைது

திருச்சி, அக். 10: திருச்சி உறையூர் அண்ணாமலைநகர் மல்லிகை சாலையை சேர்ந்தவர் விஜயகுமார்(50). பழைய இரும்பு மொத்த வியாபாரி. இதில் நேற்று முன்தினம் கடை திறந்திருந்தபோது கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி, கல்லாவில் இருந்த செல்போன் மற்றும் ரூ.1,500ஐ திருடி சென்றார். இதுகுறித்து அறிந்த விஜயகுமார், உறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து கடையில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அப்போது கல்லாவில் திருடி சென்றது, உறையூர் சோழராஜபுரம் கீழத்தெருவை சேர்ந்த ராஜீவ்காந்தி(எ)தீப்பெட்டி(32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: