பாபநாசம், அக். 10: பாபநாசம் அருகே ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் அற்புதராஜ் மகன் வினோத் (எ) பாரதி நிக்கோலஸ் (15). வழுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். நேற்று மதியம் வினோத், அவரது நண்பர்கள் ராகேஷ், பிரதீப் ஆகியோர் அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றனார். ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் வினோத் மூழ்கினார்.