தஞ்சை, அக். 10: தஞ்சையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள், குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தஞ்சை அருகே கல்விராயன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் விஜி (எ) விஜயகுமார் (31). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் தஞ்சை தாலுகா இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் பேரில் விஜயகுமாரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து விஜயகுமார், திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.