பேராவூரணி, அக். 10: பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஒலி பெருக்கி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் முருகேசன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாக்கண்ணு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வீரசந்திரசேகரன் வரவேற்றார்.