ஈரோடு, அக். 10: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 2வது மண்டலம் 20வது வார்டுக்குட்பட்ட பள்ளிவாசல் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. சுமார் 5 அடி ஆழம் கொண்ட இந்த தொட்டியில் சமீபத்தில் பெய்த மழை நீர் நிரம்பி கிடக்கிறது. தொட்டியின் மேற்புறம் மூடப்படாமல் அப்படியே விட்டுவிட்டதால் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றது. இதையடுத்து, மழை நீரை சேகரிக்கும் வகையில் சுமார் 5 அடி உயரம் கொண்ட தொட்டி கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையினால் மழைநீர் சேகரிப்பு தொட்டி நிரம்பி உள்ளது.