திருச்செந்தூர், அக்.10: திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகஸ்தர் மெய்கண்டமுத்து, பொருளாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜெயந்திநாதன் வரவேற்றார். பல் மருத்துவர் சங்கரசுப்பிரமணியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஆகியோர் 10,பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகையை வழங்கினர்.