தூத்துக்குடி, அக். 10: இஸ்ரோ வளர்ச்சி திட்டத்தின் ஒரு கட்டமாக நட்சத்திரத்தின் நுழைவுவாயில் என்ற தலைப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விண்ணில் நிலவை தவிர நான்கு இடங்கள் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதால் அந்த 4 இடங்களுக்கு செல்ல நிலவில் இருந்து எரிபொருள் நிரப்பிச் செல்லும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என நெல்லை இஸ்ரோ உந்தும நிலைய வளாக இயக்குநர் மூக்கையா தெரிவித்தார். உலக விண்வெளி வாரத்தையொட்டி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் இந்திய விண்வெளி மையத்தின் மகேந்திரகிரி உந்தும வளாக மையம் சார்பில் விண்வெளி கண்காட்சி துவங்கியது. இதில் பல்வேறு விண்வெளி ஆய்விற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் பாகங்கள், செயற்கை ேகாள் மாதிரிகள், படங்கள் இடம்பெற்றிருந்தன, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ராக்கெட்டுகள் செலுத்த பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் இயந்திரங்களின் மாதிரிகளும் வைக்கப்பட்டிருந்தன. நேற்று துவங்கிய இக்கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். விழாவுக்குத் தலைமை வகித்த மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும நிலைய வளாக இயக்குநர் மூக்கையா பேசுகையில், ‘‘அக்டோபர் 10ம் தேதி வரை கொண்டாடப்படும் விண்வெளி வார விழாவையொட்டி இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.