×

வாலிபரை வெட்டியவர் கைது

அம்பை, அக். 10: கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்குப்பாப்பான் குளம், இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (55). இவரது மகள் மாலதியை அதே பகுதியில் வசிக்கும் சிவனுப்பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர்களது இரு குடும்பத்தினர் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே சிவனுபாண்டியன் சகோதரர் சேகர் (27), முருகன் வீட்டிற்குச் சென்று தகராறு செய்து அவதூறாகப் பேசியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த முருகன், சேகரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த சேகர் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார், முருகன் மற்றும் அவரது தாயார் பாலம்மாள் மீது வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர். இதேபோல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சேகர் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி