×

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

பாவூர்சத்திரம், அக். 10:  பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் வடக்குத்தெருவை சேர்ந்த ஜான்சன் மகன் வில்சன் (34). இவருக்கு சொந்தமான வயல், வீ.கே.புதூரை அடுத்த ராஜபாண்டியில் உள்ளது. நேற்று காலையில் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அங்கு கிணற்றில் உள்ள மின்மோட்டார் பியூஸ் கேரியரை எடுக்கும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அருகில் நின்றிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக வீ.கே.புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் வில்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு