×

இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

நெய்வேலி, அக். 10: வடலூர் அடுத்த வீணங்கேணி பாலம் அருகே சம்பவத்தன்று சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வடலூர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது