வீடு புகுந்து மாஜி பஞ்சாயத்து தலைவரிடம் செயின் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பாபநாசம், அக். 9: பாபநாசம் அருகே வீடு புகுந்து மாஜி பஞ்சாயத்து தலைவரிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் கண்டக்கரையம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (50). இவர் உள்ளிக்கடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த 6ம் தேதி இவரும், இவரது கணவர் பாஸ்கரும் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் கொல்லைப்புற கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள், படுத்திருந்த வளர்மதியின் கழுத்தில் இருந்த 8 பவுன் செயினை பறித்தனர். இதை பார்த்த வளர்மதி சத்தம் போட்டார். அதற்குள் மர்மநபர்கள் செயினை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: