கொடைக்கானல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

கொடைக்கானல், செப்.20:  கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.ஊடகங்கள், சமூக விழிப்புணர்வு மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு என்ற தலைப்பின் கீழ் சர்வதேச கருத்தரங்கம் கொடைக்கானல் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது.  ல்லூரி தாளாளரும் முதல்வருமான டாக்டர் சாம் ஆபிரகாம் தலைமை தாங்கினார். கீதா ஆபிரகாம் முன்னிலை வைத்தார். பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அலோசியஸ் பேசுகையில், சிலர் பாலினம், சாதி, மதம், கலாச்சார பாலியல் போன்றவற்றின் அடிப்படையில் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஓடுக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பிற்கால இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்கள் மற்றும் ஆங்கில இலக்கியத்தின் முந்தைய இருபத்தியோராம் நூற்றாண்டின் எழுத்தாளர்கள் ஓடுக்கப்பட்டவர்கள் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கவனம் செலுத்துகிறார்கள். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்  ஒரு பத்திரிகையாளர், ஒரு இலக்கிய மாணவர் மற்றும் ஒரு சமூக சேவகர் ஆகியோர் நமது சமூகத்தின் பிரச்சினையில் கவனம் செலுத்துவதே ஆகும். இதுபற்றி எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வை பகிர்ந்து கொள்கிறது என்றார். கருத்தரங்கில் மதுரை யாதவா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ரம்யா மற்றும் பலர் பேசினர். கொடைக்கானல் கிறிஸ்தவ கல்லூரியின் சமூகநலத்துறை, ஆங்கிலத்துறை ஆகிய துறைகள் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: