உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக.,வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

திருப்பூர், செப்.20: திருப்பூர் மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருப்பூரில்  இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்களை துவக்கி வைக்க உள்ளார்.  இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: