அன்னூர், செப். 20:அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநில தம்பதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் அன்னூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அக்சயாதாஸ்(40), அவரது மனைவி பிஜைலட்சுமி தாஸ்(30) ஆகியோரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தம்பதி இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீாசர் அவர்களது வாகனத்தை சோதனை செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.