×

கிராம சுகாதார செவிலியர் பணிக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி, செப்.20: கிராம சுகாதார செவிலியர் பணிக்கான பதிவினை சரிபார்த்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 1234 கிராம சுகாதார செவிலியர்(பெண்கள் மட்டும்) பணியிடம் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்படவுள்ளது. இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 1.7.2019 அன்று 18 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இதற்கு 10ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 18 மாத கால ஆக்ஸ்லரி நர்ஸ் மிட்வொய்ப் அல்லது மல்டிபர்பஸ் ஹெல்த் ஒர்க்கர் சான்றிதழ் அல்லது 12ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இரண்டு வருட கால ஆக்ஸ்லரி நர்ஸ் மிட்வொய்ப் அல்லது மல்டிபர்பஸ் ஹெல்த் ஒர்க்கல் சான்றிதழுக்கான கல்வித் தகுதியினை முடித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேற்படி கல்வித்தகுதியுடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அனைவரும் வரும் 25ம் தேதிக்குள் தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.



Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது