×

அதிகாரி தீக்குளித்து தற்கொலை கள்ளக்காதலியிடம் விசாரணை

தேன்கனிக்கோட்டை, செப்.20:  கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தனியார் நிறுவன அதிகாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி  மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கப்பா. இவரது மனைவி சுசீலா(38). கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து தனித் தனியாக வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6 மணியளவில், வாசல் தெளிப்பதற்காக சுசீலா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது, வாசற்படியில் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையான நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுசீலா, உடனடியாக அருகில் வசிப்பவர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  கெலமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில், `சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிஷோர் வின்சென்ட் (45). இவர், ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அந்த இல்லத்தில், சமையலராக சுசீலாவும் பணியாற்றி வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த  10 மாதங்களாக சுசீலா வீட்டுக்கு கிஷோர் வின்சென்ட் அடிக்கடி வந்து  சென்றுள்ளார். கடந்த 2 மாதங்களாக சுசீலா  அவரிடம் சரிவர பேசுவதில்லை. இந்நிலையில்தான் அவர் சுசீலா வீட்டு வாசலில் எரிந்த  நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால், கிஷோர் வின்சென்ட் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சுசீலாவிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை