நலவாரியங்களை சீர்படுத்தகோரி அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, செப்.20: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநிலங்களில் உள்ள கட்டிட-அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களை கலைக்கும் மத்திய வரைவு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நலவாரியங்களை சீர்படுத்தி பட்ஜெட்டில் 3 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று அமைப்பு சாரா தொழிலாளர் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கீதா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: