×

திருச்சி உறையூரில் புகைப்படத்தை அலங்கரித்த தங்கசெயினை திருடியவர் கைது

திருச்சி, செப்.20: திருச்சி புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (74), இவரது மகள் சமீபத்தில் இறந்து விட்டார். இதையொட்டி அவரது வீட்டில் மகள் புகைப்படத்தை அலங்கரித்து அதில் மகள் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயினை மாட்டி வைத்திருந்தார். நேற்றுமுன்தினம் வெள்ளைச்சாமியின் உறவினரான புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த கென்னடி (33) என்பவர் வந்திருந்தார். அப்போது வெள்ளைச்சாமி வீட்டில் புகைப்படத்தில் தங்க சங்கிலி தொங்குவதை பார்த்தார். வெள்ளைசாமிக்கு தெரியாமல் திருடிகொண்டு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மகளின் புகைப்படத்தில் மாட்டியிருந்த செயின் திருட்டு போனதை அறிந்த வெள்ளைச்சாமி உறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கென்னடியை கைது செய்தனர்.



Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு